பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கைது!
இலங்கைஉலகம்செய்திகள்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கைது!

Share

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கைது!

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபரின் பையில் இருந்து 10.294 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் (ANF) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்களின் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என் தெரிவிக்கப்படுகிறது.

Share

1 Comment

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...