இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்
உலகம்செய்திகள்

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

Share

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தியதாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Simranjit (Shally) Singh (41) என்னும் நபர், இந்தியர்களை கடத்திய விதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்களை கால்கரி, ரொரன்றோ மற்றும் மொன்றியலுக்கு விமானம் மூலம் வரவழைக்கும் சிங், பின்னர் அவர்களை ஒன்ராறியோவிலுள்ள கார்ன்வாலுக்கு கொண்டுசென்று, அங்கிருந்து படகு மூலம் St. Lawrence நதிவழியாக அமெரிக்காவுக்குள் அனுப்பிவந்துள்ளார்.

தான் 1,000க்கும் மேற்பட்டவர்களை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தியுள்ளதாக சிங் பெருமை பீற்றிக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள சிங், 2010ஆம் ஆண்டு மனைவி மற்றும் பிள்ளையுடன் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியுள்ளார். பின்னர் அவரது தாயும் சிங்குடைய மற்றொரு பிள்ளையும் கனடா வந்து அவர்களும் அகதி நிலை கோரியுள்ளனர். ஆனால், அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கனடா அதிகாரிகள் சிங்கை நாடுகடத்த முயன்றும், இந்திய தூதரகம் பயண ஆவணங்களை வழங்க மறுத்ததால், அவரை நாடுகடத்த முடியாமல்போயிருக்கிறது.

சிங் கனடாவில் ஒரு பெண்ணை இரண்டாவதாக மணந்துகொள்ள, அந்தப் பெண் சிங்கை ஸ்பான்ஸர் செய்ய, ஆனால், அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் முன் சிங் கைது செய்யப்பட்டுவிட்டார்.

டிசம்பர் மாதம் 28ஆம் திகதி சிங்குக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...