இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்
உலகம்செய்திகள்

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

Share

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தியதாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Simranjit (Shally) Singh (41) என்னும் நபர், இந்தியர்களை கடத்திய விதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்களை கால்கரி, ரொரன்றோ மற்றும் மொன்றியலுக்கு விமானம் மூலம் வரவழைக்கும் சிங், பின்னர் அவர்களை ஒன்ராறியோவிலுள்ள கார்ன்வாலுக்கு கொண்டுசென்று, அங்கிருந்து படகு மூலம் St. Lawrence நதிவழியாக அமெரிக்காவுக்குள் அனுப்பிவந்துள்ளார்.

தான் 1,000க்கும் மேற்பட்டவர்களை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தியுள்ளதாக சிங் பெருமை பீற்றிக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள சிங், 2010ஆம் ஆண்டு மனைவி மற்றும் பிள்ளையுடன் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியுள்ளார். பின்னர் அவரது தாயும் சிங்குடைய மற்றொரு பிள்ளையும் கனடா வந்து அவர்களும் அகதி நிலை கோரியுள்ளனர். ஆனால், அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கனடா அதிகாரிகள் சிங்கை நாடுகடத்த முயன்றும், இந்திய தூதரகம் பயண ஆவணங்களை வழங்க மறுத்ததால், அவரை நாடுகடத்த முடியாமல்போயிருக்கிறது.

சிங் கனடாவில் ஒரு பெண்ணை இரண்டாவதாக மணந்துகொள்ள, அந்தப் பெண் சிங்கை ஸ்பான்ஸர் செய்ய, ஆனால், அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் முன் சிங் கைது செய்யப்பட்டுவிட்டார்.

டிசம்பர் மாதம் 28ஆம் திகதி சிங்குக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...