வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை
உலகம்செய்திகள்

வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை

Share

வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை

எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரியாவில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா
இந்த வாரம் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் USS கென்டக்கி கடந்த செவ்வாய்கிழமை பூசனுக்கு வருகை தந்து இருந்தார்.

மேலும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக 18,750 டன் ஓஹியோ-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை அமெரிக்கா தென் கொரியாவில் நிலைநிறுத்தியுள்ளது.

இதன் மூலம் 1981ம் ஆண்டுக்கு பிறகு நீர்மூழ்கி அணுசக்தி கப்பல் ஏவுகணை தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் USS கென்டக்கி-யின் தென் கொரிய வருகைக்கும், 18,750 டன் ஓஹியோ-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை நிலைநிறுத்துவத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் வட கொரியா அணு ஆயுத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதில், அமெரிக்க நீர்மூழ்கி அணுஆயுதத்தை நிலைநிறுத்துவது மற்றும் மற்ற மூலோபாய சொத்துகளை நிலைநிறுத்துவது, தங்களின் அணுஆயுத பயன்பாட்டிற்கான நிபந்தனையை பூர்த்தி செய்யக்கூடிய நிபந்தனையாகும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

வட கொரியாவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என்று தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா-தென்கொரிய கூட்டணிக்கு எதிரான வடகொரியாவின் எந்த அணு ஆயுத தாக்குதலும், உடனடி பதில் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும், மற்றும் அதன் விளைவுகள் வட கொரிய ஆட்சியின் முடிவாக இருக்கும் என்று சியோல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...