உலகம்செய்திகள்

திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்

Share

திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்

திருக்குறளை உலகறியச் செய்த ஜி.யு. போப்பிற்கு (George Uglow Pope) கனடாவில் உருவச்சிலை அமைக்கப்பட்டதை குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜி. யு. போப் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஆவார்.

தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
அவரது மொழிபெயர்ப்பு உன்னதமான மொழிபெயர்ப்பாக இன்றும் போற்றப்படுகின்றது. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பன்னிரெண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரிய இப்பணி, தமிழ் மொழியை தமிழர் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்த்தது. போப் ஐயர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றினார்.

அதன் பின்பும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் (oxford) பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஜி.யு. போப் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அவரது முழு உருவச்சிலையை நிறுவி அவரது புகழுக்கு பெருமை சேர்த்தது.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் எங்கள் திராவிட அரசு, தமிழ் இலக்கிய நூல்களை, பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக ஜி.யு.போப் பெயரில் விருது வழங்கியும் சிறப்பித்து வருகிறது.

இம்முயற்சியை முன்னெடுக்கின்ற கனடியத் தமிழர் பேரவைக்கும், கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...