மூளையை உண்ணும் அமீபா! கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு
உலகம்செய்திகள்

மூளையை உண்ணும் அமீபா! கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

Share

மூளையை உண்ணும் அமீபா! கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

கேரளாவில் 15 வயது சிறுவன் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய பாக்டீரியா தொற்றால் உயிரிழந்துள்ளான்.

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும், மத்திய நரம்பு மண்டலத்தின் அபாயகரமான தொற்று Naegleria fowleriயால் ஏற்படுகிறது.

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 15 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவர் சில தினங்களுக்கு முன்பு நீரோடைக்கு குளிக்க சென்றுள்ளார். பின்பு, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஆலப்புழா மாவட்ட மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, சில நாள்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் ஏற்பட்ட அரியவகை நோயால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள் தரப்பில், மூளையை உண்ணும் அமீபா ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட தேங்கி நிற்கும் நீரோடைகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாணவர் ஓடையில் குளிக்கும் போது அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது.ஓடையில் உள்ள Naegleria fowleri என்னும் அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து மூளையை சென்றடைகிறது எனக் கூறினர்.

அங்கு, மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது. இந்த அரியவகை நோயால் தான் மாணவர் உயிரிழந்துள்ளார்.

இது முதன் முதலில் 2017 ஆன் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. பின்பு, இரண்டாவது முறையாக இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுகிறது. அமீபா தாக்கி முதல் அல்லது இரண்டு வாரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.

பின்பு, தலைவலி அதிகமாதல், வாசனையில் மாற்றம் போன்றவை ஏற்படும். நீரின் மூலம் இந்த தொற்று ஏற்படுவதால் அசுத்தமான நீரில் குளிப்பது மற்றும் முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...