பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை

Share

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனையடுத்து விளக்கமளித்த ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்கள், ஜனாதிபதி ஒன்றும் சமூக ஊடக செயற்பாட்டை மொத்தமாக முடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கவில்லை, மாறாக கலவரங்களை தடுக்க தற்காலிகமாக தடை செய்யவே கோரிக்கை வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞர்கள் சமூக ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி நாடு முழுவதும் கலவரம் மற்றும் வன்முறையை தூண்டுவதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டிய நிலையிலேயே, ஜனாதிபதி மேக்ரான் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகஙக்ளை தற்போதைய தலைமுறை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மேக்ரான், எந்த பிரச்சனையும் நமது கை மீறும் போது நாம் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது அவற்றை துண்டிக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 250 மேயர்களை சந்தித்த மேக்ரான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்படியான ஒரு நெருக்கடியை உருவாக்குவது முறையல்ல, நமது திட்டமும் அதுவல்ல என குறிப்பிட்டுள்ள மேக்ரான், இந்த விவகாரம் தொடர்பில் உரிய விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஆனால் இதுபோன்ற ஒரு நடவடிக்கை சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா போன்ற சர்வாதிகார நாடுகளுடன் பிரான்ஸை இணைத்துவிடும் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...