ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கிய வாக்னர் கூலிப்படை தலைவன்
உலகம்செய்திகள்

ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கிய வாக்னர் கூலிப்படை தலைவன்

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவன் தற்போது ஜன்னல் இல்லாத அறையில் உயிருக்கு பயந்து பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை எதிர்ப்பவர்களை எதிரிகள் போல பாவிக்கும் விளாடிமிர் புடினால் தாம் படுகொலை செய்யப்படலாம் என வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 62 வயதாகும் ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறைக்குள் தஞ்சமடைந்துள்ளார் என அமெரிக்க உளவுத்துறை நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய கைப்பாவை நாடான பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் தற்போது ப்ரிகோஜின் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆயுத கிளர்ச்சியை கைவிட ப்ரிகோஜின் ஒப்புக்கொண்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேற ரஷ்ய அரசாங்கம் அவருக்கு அனுமதி அளித்தது.

மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படையினர் முன்னெடுத்த கிளர்ச்சியின் போது 15 ரஷ்ய விமானிகளை கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ப்ரிகோஜின் தற்போது துரோகி என விளாடிமிர் புடினால் ஒதுக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர், புடினின் செயல்பாடுகளை விமர்சித்தவர்கள் என்பதால் பல முக்கியஸ்தர்கள், ஜன்னலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவங்கள் சமீப மாதங்களாக நிகழ்ந்துள்ளது.

ஆனால், அவை அனைத்தும் விபத்துகள் என்றே ரஷ்ய தரப்பு குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் தான், அப்படியான ஒரு நெருக்கடியில் சிக்காமல் இருக்க ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர்களுக்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. துரோகிகள் அழிக்கப்பட வேண்டும் என புடின் ஆதரவு ராணுவ அதிகாரிகள் கொந்தளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த கிளர்ச்சியை தடுத்து நிறுத்த தாமே நடவடிக்கை முன்னெடுத்ததாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, விளாடிமிர் புடினை பகைத்துக் கொள்வதால் ஒரு மூட்டைப் பூச்சி போல நசுக்கப்படுவீர்கள் என ப்ரிகோஜினை எச்சரித்ததாகவும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...