download 6 1 10
உலகம்செய்திகள்

கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான உடனடி உதவிகள் குறித்து ஜி-7 நாடுகள் மீளவலியுறுத்தல்!

Share
கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான உடனடி உதவிகளின் அவசியம் குறித்து மீளவலியுறுத்தியிருக்கும் ஜி-7 நாடுகள், இலங்கை விவகாரத்தில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் கடன்வழங்குனர்கள் கூட்டம் நடாத்தப்பட்டமையைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்துவரும் கடன்நெருக்கடி குறித்து ஜி-7 நாடுகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடுகளின் கடன் ஸ்திரத்தன்மை மீதான கடுமையான சவால்கள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் அடைவில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் ஏனைய பூகோள சவால்களின் விளைவாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான உடனடி உதவிகள் மற்றும் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பொதுவானதொரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்கான ஜி-20 நாடுகளின் முயற்சிக்கான முழுமையான ஆதரவு ஆகியவற்றின் அவசியத்தை நாம் மீளவலியுறுத்துகின்றோம்.
அண்மையில் கானாவுக்கான உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதி வழங்கியமையினை வரவேற்கின்றோம். அதேபோன்று பொதுவானதொரு செயற்திட்டத்துக்கு அப்பால் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியைப் பல்தரப்பு ஒத்துழைப்பின் ஊடாகவே கையாளவேண்டும்.
இத்தகைய பின்னணியில் இலங்கை விவகாரத்தில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் கடன்வழங்குனர்கள் கூட்டம் நடாத்தப்பட்டமையை பெரிதும் வரவேற்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....