download 3 1 1
உலகம்செய்திகள்

மூதாட்டியை கடித்துக்குதறிய பொலிஸ் நாய்!

Share

பிரான்ஸில் பொலிஸாரின் மோப்ப நாய் ஒன்று மூதாட்டி ஒருவரை தவறுதலாக கடித்துக்குதறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Caluire-et-Cuire (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் வந்து சென்றதுக்குரிய அடையாளங்கள் இருந்ததால், வீட்டுக்குள் பொலிஸார் மோப்ப நாயுடன் நுழைந்தனர்.

வீட்டுக்குள் தாம் நுழைந்துள்ளதாக அறிவித்தல் விடுத்தும், யாரும் பதிலளிக்காததால் மோப்ப நாயின் கழுத்துப்பட்டியை அவிழ்த்துவிட்டு வீட்டை சோதனையிடச் செய்தனர்.

ஆனால் துரதிஷ்ட்டவசமாக அவ்வீட்டின் உரிமையாளராக 90 வயதுடைய பெண்மணி அங்கு இருந்துள்ளார். அவரை எதிர்பார்த்திராத மோப்ப நாய் அவர் மீது பாய்ந்து அவரது முகத்தை கடித்துக்குதறியது.

இதனை எதிர்பார்த்திராக பொலிஸார் நாயை பிடித்ததுடன், குறித்த பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குறித்த பெண்மணி தற்போது நலமுடன் உள்ளார் எனவும், அவர் பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...