உலகம்

மகளுடன் கிம் ஜாங் உன்!

Published

on

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகளுடன் முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார்.

வடகொரியாவினால் உருவாக்கட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இருவரும் கைகோர்த்து ஆய்வு செய்வதை வடகொரியா அரச ஊடகம் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

தனது மகளை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KCNA அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை, அவர் ஒரு வெள்ளை நிற கோட் அணிந்த புகைப்படத்தில் தனது தந்தையுடன் கைகளைப் பிடித்துக்கொண்டு பாரிய Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஆய்வு செய்தனர்.

இந்த ஏவுகணை 1,000 கிமீ (622 மைல்) உயரமான பாதையில் பயணித்து, ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஓஷிமா-ஓஷிமா தீவுக்கு மேற்கே 200 கிமீ (124 மைல்) தொலைவுக்கு சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version