japan
உலகம்செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு!

Share

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அபே என்று நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை தொடர்ந்து உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் துப்பாக்கி சூடு குறித்த பல்வேறு கலவையான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஷின் சோ அபே தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை பொலிஸார் கைது செய்துவிசாரித்து வருகிறார்கள். அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து உள்ளதா, காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஜப்பான் பிரதமராக இருந் ஷின்ஷோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020இல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...