26 7
உலகம்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு

Share

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு

மியன்மாரின் (Myanmar) மியாவாடியில் உள்ள இணைய மோசடி மையங்களில் தொழில் நிர்ப்பந்தங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய்லாந்தின் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டு எல்லைப்பகுதி ஊடாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாசினி பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.

மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளுடன் இலங்கையின் இடைவிடாத ஈடுபாட்டின் விளைவாகவே இந்த விடுதலை சாத்தியமானது என்று தூதுவர் கூறியுள்ளார்.

எனினும், எஞ்சியுள்ளவர்களின் நிலை மற்றும் குறித்த 20 பேர் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள் என்ற தகவலை தூதுவர் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக இவர்கள், பல்வேறு தொழில் உத்தரவாதங்களுக்கு மத்தியில் சென்ற நிலையிலேயே இணையக்குற்றங்களில் ஈடுபடுவோரால் தடுத்து வைக்கப்பட்டு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...