26 7
உலகம்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு

Share

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு

மியன்மாரின் (Myanmar) மியாவாடியில் உள்ள இணைய மோசடி மையங்களில் தொழில் நிர்ப்பந்தங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய்லாந்தின் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டு எல்லைப்பகுதி ஊடாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாசினி பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.

மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளுடன் இலங்கையின் இடைவிடாத ஈடுபாட்டின் விளைவாகவே இந்த விடுதலை சாத்தியமானது என்று தூதுவர் கூறியுள்ளார்.

எனினும், எஞ்சியுள்ளவர்களின் நிலை மற்றும் குறித்த 20 பேர் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள் என்ற தகவலை தூதுவர் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக இவர்கள், பல்வேறு தொழில் உத்தரவாதங்களுக்கு மத்தியில் சென்ற நிலையிலேயே இணையக்குற்றங்களில் ஈடுபடுவோரால் தடுத்து வைக்கப்பட்டு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

xபோர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 6
உலகம்செய்திகள்

தீவிரம் அடையும் ஈரான் – இஸ்ரேல் போர் – இலங்கைக்கு உதவும் இந்தியா

போர் நடவடிக்கை காரணமாக ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர இந்தியா உதவ முன்வந்துள்ளது. இஸ்ரேல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
உலகம்செய்திகள்

ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், ஈரான் மற்றும் அணு ஆயுதம் தொடர்பில் தவறான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 3
உலகம்செய்திகள்

செம்மணி மனிதபுதைகுழி தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கடிம் எழுதிய உமா குமரன்

செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவும் ஆதரவளிக்கவேண்டும் என்று பிரித்தானிய...