உலகம்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு

Share
26 7
Share

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு

மியன்மாரின் (Myanmar) மியாவாடியில் உள்ள இணைய மோசடி மையங்களில் தொழில் நிர்ப்பந்தங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய்லாந்தின் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டு எல்லைப்பகுதி ஊடாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாசினி பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.

மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளுடன் இலங்கையின் இடைவிடாத ஈடுபாட்டின் விளைவாகவே இந்த விடுதலை சாத்தியமானது என்று தூதுவர் கூறியுள்ளார்.

எனினும், எஞ்சியுள்ளவர்களின் நிலை மற்றும் குறித்த 20 பேர் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள் என்ற தகவலை தூதுவர் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக இவர்கள், பல்வேறு தொழில் உத்தரவாதங்களுக்கு மத்தியில் சென்ற நிலையிலேயே இணையக்குற்றங்களில் ஈடுபடுவோரால் தடுத்து வைக்கப்பட்டு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...