இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் ஈரானிய தளபதிகள் பலி

24 660bd2ea7303f

இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் ஈரானிய தளபதிகள் பலி

இஸ்ரேலிய(Israel) எறிகணை தாக்குதலில் 2 ஈரானிய(Iran) சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரச ஊடகம் ஒன்றினை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்து.

இந்த தாக்குதல் தொடர்பில் கவலையடைவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில், இஸ்ரேல் எந்தவித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.

அதேநேரம், காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 மனிதாபிமான உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version