2 36
உலகம்செய்திகள்

கனடாவில் கல்வி கற்கச் சென்ற 172 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

Share

கனடாவில் கல்வி கற்கச் சென்ற 172 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், அதிகபட்சமாக, கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் (Kodikunnil Suresh) என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா சென்றவர்களில் 108 மாணவர்கள், பிரித்தானியா சென்றவர்களில் 58 மாணவர்கள், அவுஸ்திரேலியா சென்றவர்களில் 57 மாணவர்கள், ரஷ்யா சென்றவர்களில் 37 மாணவர்கள், ஜேர்மனி சென்றவர்களில் 24 மாணவர்கள் என மொத்தம் 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கனடாவில் உயிரிழந்த மாணவர்களில் 9 பேர் வன்முறைக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....