2 36
உலகம்செய்திகள்

கனடாவில் கல்வி கற்கச் சென்ற 172 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

Share

கனடாவில் கல்வி கற்கச் சென்ற 172 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், அதிகபட்சமாக, கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் (Kodikunnil Suresh) என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா சென்றவர்களில் 108 மாணவர்கள், பிரித்தானியா சென்றவர்களில் 58 மாணவர்கள், அவுஸ்திரேலியா சென்றவர்களில் 57 மாணவர்கள், ரஷ்யா சென்றவர்களில் 37 மாணவர்கள், ஜேர்மனி சென்றவர்களில் 24 மாணவர்கள் என மொத்தம் 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கனடாவில் உயிரிழந்த மாணவர்களில் 9 பேர் வன்முறைக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...

01 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை...

01 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: சொகுசு வாகனங்கள் இலங்கையில் தரையிறக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

01 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியில் பாரிய ஊழல்: அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போர்க்கொடி!

நாட்டில் தற்போது நிலவி வரும் மின்சார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்கள்...