இந்தியாஉலகம்செய்திகள்

திடீரென பாலத்தில் கவிழ்ந்த பேருந்து 15 பேர் உயிரிழப்பு!

download 10 1 5
Share

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்றைய தினம் (09.05.2023) அதிகாலை மத்தியப் பிரதேச மாநிலத்தின் தசங்கா பகுதியிலுள்ள டோங்கர்கான் பாலத்தில்  இடம்பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பேருந்து ஒன்று சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளது.

குறித்த பேருந்து டோங்கர்கான் பாலத்தின் மீது சென்றபோது திடீரென  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி பாலத்தில் இருந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...