hq720 7 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி

இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 7ம் திகதி ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், மோதல்கள் ஆரம்பானது முதல் முன்னரங்கப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது முதல் இதுவரையில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் பலஸ்தீனியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

11 பலஸ்தீன ஊடகவியலாளர்களும், மூன்று இஸ்ரேல் ஊடகவியலாளர்களும், ஒரு லெபனான் ஊடகவியலாளரும் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் பாரிய தியாகத்துடன் போர் பற்றிய சகல உண்மைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...