உலகம்செய்திகள்

பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி

24 66255bbc80e8f
Share

பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி

பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

இதன்போது உயிரிழந்த 14 பேரும் நூர் ஷம்ஸ் முகாமில் இருந்து வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

 

இதற்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

 

இந்நிலையில் கடந்த 19அம் திகதி இரவு ரஃபாவின் புறநகர் பகுதியான டெல் சுல்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களால் இடம்பெயர்ந்த காசா மக்களில் அதிகமானோர் எகிப்துக்கு அருகில் உள்ள ரஃபாவில் பதுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...