tamilni 179 scaled
உலகம்செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய நகரத்தில் இருந்து 1000 உடல்கள் மீட்பு

Share

வெள்ளத்தில் மூழ்கிய நகரத்தில் இருந்து 1000 உடல்கள் மீட்பு

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை மத்திய தரைக்கடல் புயல் டேனியல் வலிமையாக தாக்கி அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த Derna நகரம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதன் அடிப்படையில் கூறப்படுகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ள டெர்னாவில் இருந்து இதுவரை 1000 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை கிழக்கு நிர்வாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அவசரக் குழு உறுப்பினருமான Hichem Chkiouat தெரிவித்த கருத்தில், நான் டெர்னாவுக்கு சென்று விட்டு திரும்புகிறேன், அங்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது, உடல்கள் எங்கும் கிடக்கின்றன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெர்னாவில் 1000 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நகரில் இருந்த 25 சதவீத மக்கள் காணாமல் போய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68fe267ebcb42
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்றும் சதி: சந்தேகம் எழுப்பும் யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும்...

1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...