4 19 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Share

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக ஆர்வலரான Mokhmad Abdurakhmanov என்பவரைக் கொல்ல திட்டம் தீட்டியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Valid, ஆயுதம் ஒன்றை வாங்கியதாகவும், கூலிக்கு கொலை செய்யும் ஒருவரை ஏற்பாடு செய்ததாகவும், அவரை ஜேர்மனிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ததாகவும், Mokhmadஇன் சகோதரரையும் அவரது வீட்டையும் வேவு பார்த்ததாகவும், துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலை முயற்சி, Mokhmadஐ அமைதியாக்குவதற்காக மட்டுமானதல்ல, அவரது சகோதரரான Tumso Abdurakhmanovஐ மிரட்டுவதற்காகவும்தான்.

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை: பின்னணி | 10 Years In Prison For A Russian In Germany

அதாவது, Tumso, செசன்யாவின் தலைவரான Ramzan Kadyrovஐ கடுமையாக விமர்சிப்பவர். அவர் செசன்யாவிலிருந்து தப்பியோடி ஸ்வீடனில் வாழ்ந்துவருகிறார்.

ஆகவே, அவரை மிரட்டுவதற்காகவும்தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. Ramzan Kadyrovஇன் ஆதரவாளரான ஒருவரின் உத்தரவின் பேரிலேயே Mokhmadஐ கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...