tamilni 283 scaled
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்!

Share

அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்!

நவராத்திரி விழாவின் போது வீதிகளில் நடனமாடிக்கொண்டிருந்து 10 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தொடர்ந்து 24 மணித்தியாலம் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 10 பேரும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து 24 வயதுடைய ஒருவரும் மயங்கி விழுந்துள்ளார்.

பின் அடுத்தடுத்து 8 பேர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவராத்திரி தொடங்கிய நாட்களில் இருந்து நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரையில் 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன. ஆகவே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் இதுவரை மாரடைப்பால் இளைஞர்களும், சிறுவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் இத்தனை இளைஞர்கள் உயிரிழந்திருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...