tamilni 283 scaled
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்!

Share

அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்!

நவராத்திரி விழாவின் போது வீதிகளில் நடனமாடிக்கொண்டிருந்து 10 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தொடர்ந்து 24 மணித்தியாலம் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 10 பேரும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து 24 வயதுடைய ஒருவரும் மயங்கி விழுந்துள்ளார்.

பின் அடுத்தடுத்து 8 பேர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவராத்திரி தொடங்கிய நாட்களில் இருந்து நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரையில் 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன. ஆகவே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் இதுவரை மாரடைப்பால் இளைஞர்களும், சிறுவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் இத்தனை இளைஞர்கள் உயிரிழந்திருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...