tamilni 74 scaled
உலகம்செய்திகள்

இத்தாலியில் குடியேற அரிய வாய்ப்பு

Share

இத்தாலியில் குடியேற அரிய வாய்ப்பு

இத்தாலியில் நகரத்தில் இருந்து கலாப்ரியா கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு (11,357,468.36 இலங்கை ரூபா) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் “கால்விரல்” என வர்ணிக்கப்படும் கலாப்ரியா, கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றதாகும்.

கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண கலாப்ரியா நிர்வாகம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இத்தாலி நகரத்தில் இருந்து கலாப்ரியா கிராமத்திற்கு குடிபெயர்பவர்களுக்கு 28 ஆயிரம் பவுண்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கிராமத்திற்கு குடியேறுபவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளை விதித்துள்ளது,

1.குடியேறுபவர் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

2.கிராமத்தில் கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன் வர வேண்டும் என்பதுடன் 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராமப்பொருளாதாரம் சரிந்து வருவதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் இது போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...