VP MOB HEZBOLLAH
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை… சோதிக்க வேண்டாம் என நெதன்யாகு

Share

ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை… சோதிக்க வேண்டாம் என நெதன்யாகு

ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போரில் களமிறங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்னொரு கட்டத்திற்கு நகரும்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தொடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், முதன்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், தங்கள் முன் அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளன என இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹமாஸ் படைகளின் தாக்குதலை மொத்தமாக பாராட்டிய அவர், அது புனிதப்போர் என்றார். மட்டுமின்றி, இந்தப் போரானது இன்னொரு கட்டத்திற்கு மிக விரைவில் நகரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் இஸ்ரேலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், அவர்களின் பலவீனம் அம்பலமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார். ஆனால் ஹசன் நஸ்ரல்லாஹ் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,

வடக்கிலுள்ள எங்கள் எதிரிகளுக்குச் சொல்கிறேன், எங்களைச் சோதிக்க வேண்டாம், நீங்கள் பெரும் விலை அளிக்க நேரிடும் என்றார். இதனிடையே, ஈராக் மற்றும் யேமன் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

அதிக ஆயுத பலம் கொண்ட
மேலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முட்டாள்தனமான தவறு என்றும் எச்சரித்தார். அத்துடன் நாங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளோம் என்பதையும் வெளிப்படுத்த விரும்புகிறோம் என்றார் ஹசன் நஸ்ரல்லாஹ்.

2006ல் இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா முன்னெடுத்த சண்டையில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா உலகிலேயே அதிக ஆயுத பலம் கொண்ட, அரசு சாரா குழுக்களில் ஒன்று.

இவர்கலிடம் 60,000 உயர் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர். இவர்களிடம் குவிந்திருக்கும் ஏவுகணையால் இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...