23 64c8f8c4ddd49
உலகம்செய்திகள்

மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற இந்திய வம்சாவளியினர்

Share

மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற இந்திய வம்சாவளியினர்

லண்டனில், விளையாட பயன்படுத்தும் மட்டை ஒன்றால் தன் மனைவியை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பொலிஸ் நிலையம் சென்ற முதியவர்
கடந்த மே மாதம் 2ஆம் திகதி, கிழக்கு லண்டனிலுள்ள Romford என்னுமிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற Tarsame Singh (79), தான் தன் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பொலிசார் கிழக்கு லண்டனிலுள்ள Hornchurch என்னுமிடத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

அங்கே சிங்குடைய மனைவியான மாயா தேவி ( Maya Devi) இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரைக் கொல்ல சிங் பயன்படுத்திய மட்டையும் அவர் அருகிலேயே கிடந்துள்ளது.

தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் அதிர்ச்சியில் உறைந்துபோன நிலையில், எதற்காக தன் மனைவியை அடித்துக்கொன்றார் என சிங் கூறவேயில்லை.

குற்றத்தை ஒப்புக்கொண்ட முதியவர்
இந்நிலையில், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை 31ஆம் திகதி, தான் தன் மனைவியை மட்டையால் அடித்துக்கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார் சிங்.

செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி சிங் தன் மனைவி மாயா தேவியைக் கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...