24 664f0c91c49fd
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

Share

பிரித்தானியாவிலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பிரித்தானியாவில் பல முக்கிய விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ குடும்பத்தினர்கூட, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், தாங்கள் கலந்துகொள்ள இருந்த பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.

இந்நிலையில், பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும்வரை, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

விடயம் என்னவென்றால், தேர்தல் முடிவுகள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பாதகமான முடிவுகளைக் கொடுக்குமானால், அதாவது, ரிஷி பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா திட்டம் செயல்படாமலே போகவும் வாய்ப்புள்ளது. காரணம், லேபர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், ருவாண்டா திட்டமே ரத்து செய்யப்படும் என லேபர் கட்சித் தலைவரான Keir Starmer தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...