5 11 scaled
உலகம்செய்திகள்

பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை: விவரம் செய்திக்குள்

Share

பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை: விவரம் செய்திக்குள்

பிரான்சில் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ள நிலையில், காட்டுத்தீ மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், அதாவது, நேற்றும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் வெயில் உச்சத்தைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக தென் பிரான்சில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை தாண்டிவிட்டது.

பிரான்சின் 96 டிபார்ட்மெண்ட்களில் 50க்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் இரண்டாவது அதிகபட்ச வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். வரும் நாட்களில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதிகபட்சமாக சிவப்பு எச்சரிக்கையாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுத்தீ ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வனப்பகுதிகளுக்குச் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பிரான்சிலுள்ள ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள Chanousse என்னும் கிராமத்தின் அருகே காட்டில் தீப்பற்றியுள்ளது.

சுமார் 260 தீயணைப்புவீரர்கள் அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 120 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மரங்களை தீ கபளீகரம் செய்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...