1 9
உலகம்செய்திகள்

பதவி விலகிய 2 நாளில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியாக நியமித்த புடின்: யார் அவர்?

Share

பதவி விலகிய 2 நாளில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியாக நியமித்த புடின்: யார் அவர்?

வடக்கு ரஷ்யாவின் முன்னாள் தலைவரை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்ற புடின் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோமி குடியரசின் தலைவராக செயல்பட்டு வந்தவர் விளாடிமிர் உய்பா (Vladimir Uyba). இவர் செவ்வாய்க்கிழமை அன்று பதவி விலகுவதாக அறிவித்தார்.

வருடாந்திர மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, இந்த வாரம் ராஜினாமா செய்யும் மூன்றாவது பிராந்திய நிர்வாகி உய்பா ஆவார்.

முன்னதாக, கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ரஷ்யாவின் பெடரல் மருத்துவ பயாலஜிக்கல் ஏஜென்சிக்கு உய்பா தலைமை தாங்கினார். இது ஒரு தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பாகும்.

இந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்ற விளாடிமிர் உய்பாவை, ஜனாதிபதி புடின் நியமித்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது புதிய பதவியில் உய்பா, முக்கிய ராணுவ மருத்துவ இயக்குனரகத்தின் தலைவரான டிமிட்ரி ட்ரிஷ்கின், ரஷ்ய துருப்புக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதிலும், மருத்துவ உபகரணங்களை வழங்குவதை மேற்பார்வையிடுவதிலும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...