164775 death 2 scaled
உலகம்செய்திகள்

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

Share

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம், கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற போது ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆவில் சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார்.

இவர், தனது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காடம்பாறை அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
அணையில் நேர்ந்த சோகம்
இவர்கள் நான்கு பேரும் காடம்பாறை அணையில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, பிரதீப் பால்சாமி குளித்துக் கொண்டிருக்கும் போது தண்னீரில் மூழ்கியுள்ளார்.

அதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனே, காடம்பாறை காவல் நிலையத்திற்கு நண்பர்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பிரதீப் பால்சாமியின் உடலை தேட ஆரம்பித்தனர். அந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் உதவியுடன் தேடினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. பின்பு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...