செய்திகள்உலகம்

தெற்குக் கரையோரம் எரிகிறது – பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!!

fire 1
Share

தெற்குக் கரையோரம் எரிகிறது – பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!!

உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது.

பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமான ரிவியராவை (Riviera) உள்ளடக்கிய தெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப் பிராந்தியத்திலேயே பெரும் காட்டுத்தீ பரவி கட்டுக்கடங்காமல் எரிகிறது. அங்கு வார்(var) என்னும் மாவட்டத்தின் கடற்கரை நகரமான Saint-Tropez தீயால் சூழப்பட்டுள்ளது.

திங்களன்று பரவத் தொடங்கிய தீ la plaine des Maures எனப்படுகின்ற இயற்கை வனவளப் பிரதேசத்தின்
அரைவாசிப் பகுதி அடங்கலாக ஆறாயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தாவர இனங்களை அழித்துள்ளது. தொடர்ந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

தங்குமிட விடுதிகளில் கோடை விடுமுறையைக் கழிக்கின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் பொலீஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிரு நிமிட அவகாசத்தில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு அவசரமாக இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்ததாக உல்லாசப்பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

fire1

சில இடங்களில் இருபது முதல் நாற்பது மீற்றர் உயரத்துக்குத் தீப் பிளம்பு கிளம்புவதைக் காணமுடிவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 900 வீரர்கள் 150 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15
விமானங்கள் சகிதம் முழு மூச்சாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகப் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் பொதுவாகக் கடும் கோடையில் ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தங்கள் நேர்வதுண்டு. ஆனால் இந்த முறை நெருப்பின் வீரியம் மனித இருப்பை அச்சுறுத்துகிறது. வளிமண்டலத்தின் கடும் வெப்ப அனலும் அதனைப் பரப்பி வீசுகின்ற காற்றும் தீயணைப்பு முயற்சிகளை சவாலாக்கி உள்ளன.

நெருப்பு அங்கு பரந்த பரப்புக்கு பரவிவிடக் கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் நாட்டின் அதிபர் மக்ரோன்
நேற்று மாலை காட்டுத் தீ பாதித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். உள்துறை அமைச்சரும் அவருடன் அங்கு சென்றார். மக்ரோன் அங்கு தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களோடு உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

fire..

இந்த ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்கள் உலகை உச்ச வெப்பத்தில் வறுத்தெடுத்த மாதங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மத்தியகடல் பிராந்தியத்தில் அதிகரித்த வெப்பம் காரணமாக கிறீஸ், ஸ்பெயின்
துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளின் பல இடங்களில் காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...