25 3
உலகம்செய்திகள்

டிரம்பின் வருகையுடன் புதிய மைல்கல்லை தொட்டது பிட்காயின்

Share

டிரம்பின் வருகையுடன் புதிய மைல்கல்லை தொட்டது பிட்காயின்

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான (Cryptocurrency) பிட்காயின் (Bitcoin)மதிப்பு அதிகரித்து அதன் மதிப்பு 1 லட்சம் டொலராக பதிவாகியுள்ளது.

அன்மையில் அமெரிக்க (United States) ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் (Donald Trump) வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையின் பெருமதி உயர்ந்ததுடன் தங்கம், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

இவை அத்தனையையும் விடவும் அதிகமாக பேசப்படுவதும், பலருடைய கவனம் பெற்றது இணைய நாணயமான கிரிப்டோகரன்சியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டொலராக இருந்தது.

டிரம்பின் வருகையுடன் புதிய மைல்கல்லை தொட்டது பிட்காயின் | Bitcoin Price

விரைவில் இது 1 லட்சம் டொலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டொலரை இன்று (05.12.2024) தொட்டுள்ளது.

இலங்கை ரூபாவில் இதன் பெறுமதி கிட்டத்தட்ட 03 கோடியாகும். பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற 4 வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்ததுடன்.

தேர்தல் நாளில் கிரிப்டோ கரன்சி 69,374 அமெரிக்க டொலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...