4 21 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியின் ஒரு திட்டத்தை பின்பற்ற பிரான்ஸ் ஜனாதிபதி விருப்பம்

Share

ஜேர்மனியின் ஒரு திட்டத்தை பின்பற்ற பிரான்ஸ் ஜனாதிபதி விருப்பம்

ஜேர்மனி வழங்கும் குறைந்த கட்டண ரயில் திட்டம் போன்றதொரு திட்டத்தை பிரான்சிலும் அமுல்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி தொடர்ச்சியாக பல்வேறு குறைந்த கட்டண ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது.

ஜேர்மனி 49 யூரோக்கள் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், வெறும் 10 யூரோ பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அதுவும் அமோக வரவேற்பைப் பெற்றது.

ரயிலில் பயணக்கட்டணம் குறைவாக இருப்பதால், பலர் தங்கள் வாகனங்களை விட்டு விட்டு ரயிலில் பயணிக்கத் துவங்குகிறார்கள். இதனால், நாட்டில் எரிபொருள் மிச்சமாவதுடன், காற்று மாசு ஏற்படுவதும் குறைகிறது. மக்களுக்கும் மகிழ்ச்சி. ஆகவேதான் அரசுகள் இதுபோல் சலுகை விலை பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்கின்றன.

ஜேர்மனியைப் போலவே, பிரான்ஸ் உள்ளூர் ரயில்களிலும் சலுகை விலை பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்ய விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர், ஜேர்மனியைப் போலவே பிரான்சிலும் மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் மட்டுமே கட்டணம் கொண்ட ரயில் பயணச்சீட்டை அறிமுகம் செய்ய பிரான்ஸ் விரும்புகிறதா என்று கேட்டனர்.

தான் அந்த திட்டத்துக்கு ஆதரவாகவே உள்ளதாக தெரிவித்த மேக்ரான், இந்த திட்டத்தை பின்பற்ற விரும்பும் அனைத்து பகுதிகளிலும் அதை துவங்க தான் போக்குவரத்து அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...