af
உலகம்செய்திகள்

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்!

Share

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்!

ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்திய நிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்கா உட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சில வார கால இடைவெளிக்குள்- நாட்டின் எண்பது வீதமான பகுதிகளை தலிபான் படைகள் கைப்பற்றிவிட்டன.

நாட்டின் இரண்டாவது, மூன்றாவது பெரிய நகரங்களாகிய கந்தஹார் (Kandahar) ஹெரத்(Herat) இரண்டையும்
கைப்பற்றிவிட்ட தலிபான்கள் சனிக்கிழமை தலைநகரில் இருந்து 11 கிலோ மீற்றர்கள் தொலைவில் நிலைகொண்டிருந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிய மக்கள் பலரும் தாங்கள் உலகத்தால் கைவிடப்படுகின்றோம் என உணர்கின்றனர். பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) நாட்டுக்கு ஆற்றிய ஓர் உரையில், தலிபான்களிடம் இருந்து தலைநகரைப் பாதுகாப்பதற்காக மீள அணிதிரளுமாறு தனது முப்படையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தலிபான்கள் மோதலைத் தவிர்த்து அரசியல் வழிமுறைகளில் அதிகாரத்துக்கு வருவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று ஐ. நா. செயலாளர் நாயகம் கேட்டிருக்கிறார்.

நாட்டின் தேசியத் தலைநகரான காபூல் வரும் நாள்களில் தலிபான்களிடம் வீழும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா அங்குள்ள தனது ராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மூவாயிரம் துருப்பினரை காபூலில் இறக்கி உள்ளது.

இங்கிலாந்து தனது பிரஜைகள் வெளியேற்றுவதற்காக அறுநூறு படைவீரர்களை அங்கு அனுப்பியிருக்கிறது. பலநாடுகளும் தங்களது தூதரகப் பணியாளர்களது எண்ணிக்கையைக் குறைத்து மூடுவதற்கான ஆயத்த நிலையில் உள்ளன.

aff

டென்மார்க், நோர்வே தூதரகங்கள் மூடப்பட்டவிட்டன. டென்மார்க் தனது தூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது நாட்டில் அரசியல் புகலிடம் அளித்துள்ளது.

20 ஆயிரம் பேருக்கு கனடாவில் புகலிடம் மிக முக்கிய உதவியாக கனடா நாடு பெண்கள், சிறுவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான சுமார் இருபது ஆயிரம் ஆப்கானிஸ்தானியர்களைத் தனது நாட்டில் குடியமர்த்த முன்வந்துள்ளது.

அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினருக்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கும் பல நாடுகளில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசியல் நிலைவரம் நிச்சயமற்ற நிலைமைக்குள் சென்று கொண்டிருப்பதால் தத்தமது நாடுகளில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களைக் கட்டாயமாகத் திருப்பி
அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன.

சமீப காலமாக பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோருகின்ற வெளிநாட்டவர்களில் ஆப்கானிஸ்தானியர்களே முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 886 ஆப்கானியர்கள்
பிரான்ஸில் தமது தஞ்சக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

தற்போது இடம்பெறும் மோதல்களில் பல லட்சக்கணக்கானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அதனால் வரும் நாள்களில் அங்கிருந்து குடிபெயர்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...