23 64ee48af4f5d3
உலகம்செய்திகள்

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்

Share

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்

ஜேர்மனியில் டானூப் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் விவகாரம் ஜேர்மன் பொலிசாரை திணறடிக்க வைத்துள்ளது. 5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனின் சடலமானது பவேரியாவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவனை கல் ஒன்றால் கட்டி டானூப் நதியில் வீசியுள்ளனர். ஜேர்மன் பொலிசாரால் சிறுவனை அடையாளம் காண முடியவில்லை என்பதுடன் மரண காரணத்தையும் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை நாடியதுடன், Black Notice எனப்படும் அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சர்வதேச எச்சரிக்கை விடுக்கவும் வலியுறுத்தியது.

கடந்த மே 19 அன்று சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, எத்தனை நாட்கள் தண்ணீரில் இருந்தது என்பது தெரியவில்லை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 15 கிலோ உடல் எடையுடன் 3 அடி 7 அங்குலம் உயரத்துடன் காணப்பட்டான் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் ஜேர்மனிக்கு வெளியே சில காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொலிசார், 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இன்டர்போல் இந்த விவகாரத்தில் உதவ முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், சிறுவன் தொடர்பில் எங்கேயோ ஒருவருக்கு உண்மை தெரியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...