கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துயர சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
கனடாவில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துமாறு கனேடியப் பொலிஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
விபத்தில் யாழ் இளைஞன் மரணமடைந்தமை, கனடாவிலுள்ள அவரது குடும்பத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.