15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

Share

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணை செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சர்ச்சையானது அமெரிக்காவிற்குள் உளவுத்துறை மற்றும் வெள்ளை மாளிகை இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை முழுமையாக அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை மறுத்து, சர்வதேச ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் புனையப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “Midnight Hammer” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் ஈரானின் அணு தள உருவாக்கம் மற்றும் இராணுவ பயன்பாட்டிற்கான அணுசக்தி திறனை முற்றிலுமாக அழித்துவிட்டதாக விட்காஃப் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகை, உளவுத்துறையின் மதிப்பீட்டை மறுத்து, ட்ரம்பின் அறிவிப்பு சரியானது என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த மோதல் உலகளாவிய அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ட்ரம்ப் நிர்வாகத்தை நிராகரிக்க முயலும் முயற்சியாகவும் குற்றச்சாட்டுக்களும் வலுத்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...