2 15
இலங்கைசெய்திகள்

கண்டியில் சண்டித்தனம் செய்த ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

Share

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கண்டி மருத்துவமனை வளாகத்தில் அடாவடியாக நடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 25ம் திகதி கண்டி மருத்துவமனை வளாகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த 25ம் திகதி, கண்டி மருத்துவமனைக்கு உள்ளாக செல்லும் வழிப்பாதையால் தனது வாகனத்தில் உட்பிரவேசிக்க முயன்றுள்ளார்.

அதன்போது அவரது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கான இலச்சினையோ, அரச இலச்சினையோ இல்லாத நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அவர் பாதுகாப்புப் பிரிவு ஊழியர்களுடன் கடுமையாக வாய்த் தர்க்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா” என்று அவர் உரத்த குரலில் கேட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அவ்விடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதும், அவர்களுக்கும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொலிஸாருடன் கடுமையாக வாய்த்தர்ககம் செய்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களை விட தற்போதைய ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அடாவடித்தனங்களை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக இதன்போது பொலிஸார் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கண்டி மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...