3 15 scaled
உலகம்செய்திகள்

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பயங்கர தீ: குழந்தை உட்பட 73 பேர் வரை பலி

Share

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பயங்கர தீ: குழந்தை உட்பட 73 பேர் வரை பலி

தென்னாப்பிரிக்காவில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீயில், குழந்தை உட்பட 73 பேர் வரை உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோஹன்னஸ்பர்கில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. தரைத்தளத்தில் தீப்பற்றி ஆக்ரோஷமாக எரியத் துவங்கியதால் ஏராளமானோர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளார்கள்.

தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் வேகவேகமாக மக்களைக் காப்பாற்றும் பணியிலும், மறுபக்கம் தீயை அணைக்கும் பணியிலும் இறங்கியுள்ளார்கள்.

அந்தக் கட்டிடத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏழு சிறுவர்கள், அவர்களில் ஒரு வயது குழந்தை ஒன்று உட்பட, 73 பேர் வரை பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சிலர், தீயிலிருந்து தப்ப ஜன்னல்கள் வழியாக குதித்ததில் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், தீயில் 52 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களும், புகையால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

அந்த கட்டிடத்தில் சுமார் 200 பேர் வரை இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளார்கள். இந்த கோர சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....