23 64ee8985180f6
உலகம்செய்திகள்

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

Share

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

தற்போதைய சூழலில் சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது என பிரேசிலின் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரஷ்யா தகவல் அளித்துள்ளது.

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட எம்ப்ரேயர் விமானம் கடந்த வாரம் மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளானதில் இறந்தனர்.

ரஷ்ய ராணுவ நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 மாதங்களுக்கு பிறகு எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியாகியுள்ளார். 1999ல் ரஷ்யாவின் ஆட்சி பொறுப்புக்கு வந்த விளாடிமிர் புடினுக்கு இந்த ஆயுத கிளர்ச்சியானது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாரணைக்கு உதவ ரஷ்யா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டால், உதவ தயார் என பிரேசிலின் CENIPA அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காத ரஷ்யா, தற்போது விசாரணை முன்னெடுக்காது என அறிவித்துள்ளது.

ஆனால் பிரிகோஜின் இறப்பில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ரஷ்யா வெளிப்படையாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சில முன்னாள் புலனாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய எம்ப்ரேயர் விமானமானது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்புடைய விமான விபத்தில் எந்த வகையிலும் ரஷ்யா ஈடுபடவில்லை என்றே புடின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்புடைய விமானமானது மாஸ்கோவில் இருந்து உள்ளூர் நகரமொன்றில் புறப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியுள்ளதால், அது சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட தேவையிருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...