tamilnaadi 152 scaled
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு

Share

இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு

பங்களாதேஷில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த 100ற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த பயணிகள் தொடர்ப்பில் தகவலிருந்த இந்தோனேசிய பாதுகாப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய இது தொடர்பில் தகவலறிந்த இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...