asdfsaf8
செய்திகள்இலங்கை

ஒரு கோடி போதைப்பொருளுடன் பெண் கைது!!

Share

களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 064 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை அசங்கவிற்கு சொந்தமான போதைப்பொருள் என STF தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்காக கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (7) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

சந்தேகநபர் 40 வயதுடைய பெண் எனவும் அவரது கணவர் மீதும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...