20211105 124517 1
செய்திகள்இலங்கை

பட்டதாரிகளின் பட்டம் வீட்டில் முடக்கப்படுமா? யாழில் போராட்டம்

Share

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகள் ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அனைத்து சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும், உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு, ஆயுர்வேத வைத்தியர் குறைபாட்டினை உடனடியாக நிவர்த்தி செய், தேர்தல் வாக்குறுதி வெறும் பேச்சில் மட்டுமா?, பட்டதாரிகளின் பட்டம் வீட்டில் முடக்கப்படுமா?, இன்னும் எத்தனை காலம் தான் இழுத்தடிப்பு, சுதேச மருத்துவம் அரசுக்கு தேவையில்லையா,

20211105 122931 1

சேதனப்பசளையை ஊக்குவிக்கும் அரசு சுதேச மருத்துவத்தை நிராகரிப்பது ஏன்? போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.

போராட்டத்தின் பின்னர் வடமாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...