footbool
செய்திகள்விளையாட்டு

உலகக் கோப்பை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி எது?

Share

உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது.

22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில், கட்டாரைத் தவிர பங்கேற்கவுள்ள ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமே தெரிவாகவுள்ளன.

இந்நிலையில், இப்போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய உலகக் கோப்பை காற்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக 13 அணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் கண்டத்தில், போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றன.

இப்போட்டியில் வெற்றிபெற்று முதல் அணியாக ஜேர்மனி உலகக் கோப்கை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...