இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.
அந்தப் பனிமலை ‘ஐஸ் ஸ்தூபம் (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கப்படுகின்றது.
இத் திட்டம் 2013ஆம் ஆண்டு ‘சோனம் வாங்சுக்’ என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் இந்த யோசனை தற்பொழுதுதான் ஆரம்பநிலையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அபர்தீன் க்ரையோஸ்ஃபியர் மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக் குழுவினர் இப்பகுதியில், இந்த யோசனையை மேம்படுத்தவும், அதை பரவலாக பயன்படுத்தவும் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐஸ் கோபுர திட்டத்தின் படி, இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கிராமங்கள், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கின்றன.
ஆகவே இதற்குத் தீர்வாக இப்பனிமலைத் திட்டங்கள் அமைகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், உலகில் உள்ள பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன எனவும், கடந்த 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு 270 பில்லியன் டன் பனிமலைகள் உருகிவிட்டன எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment