ice
செய்திகள்உலகம்

இமய மலையில் தண்ணீர் பஞ்சமா? – ஐஸ் கோபுர திட்டம் முன்னெடுப்பு!

Share

இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து  வருகின்றனர்.

அந்தப் பனிமலை ‘ஐஸ் ஸ்தூபம் (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கப்படுகின்றது.

இத் திட்டம் 2013ஆம் ஆண்டு ‘சோனம் வாங்சுக்’ என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இந்த யோசனை தற்பொழுதுதான் ஆரம்பநிலையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அபர்தீன் க்ரையோஸ்ஃபியர் மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக் குழுவினர் இப்பகுதியில், இந்த யோசனையை மேம்படுத்தவும், அதை பரவலாக பயன்படுத்தவும் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐஸ் கோபுர திட்டத்தின் படி, இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கிராமங்கள், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கின்றன.

ஆகவே இதற்குத் தீர்வாக இப்பனிமலைத் திட்டங்கள் அமைகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், உலகில் உள்ள பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன எனவும், கடந்த 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு 270 பில்லியன் டன் பனிமலைகள் உருகிவிட்டன எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...