Screenshot 20260110 110938 Gallery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜே.வி.பி-யின் கொள்கைகள் நாட்டிற்குப் பொருந்தாது: கல்விச் சீர்திருத்தம் குறித்து நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

Share

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கொள்கைகளுக்கு ஏற்ற கல்விச் சீர்திருத்தங்களை முழு நாட்டிற்கும் திணிக்க முயல்வது தவறான முடிவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்றி, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே அமைகின்றன என அவர் சாடினார்.

“அகங்காரத்துடன் எடுக்கப்படும் இத்தகைய தன்னிச்சையான முடிவுகள் நாட்டுக்கோ, மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எவ்வித நீதியையும் பெற்றுத்தராது” என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மதம் மற்றும் கலாசார விவகாரங்களில் ஜனாதிபதி தலையிட வேண்டாம் என்றும், அவை உணர்வுபூர்வமான விடயங்கள் என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது கோரிக்கை விடுத்தார்.

அரச இயந்திரத்திலும் கல்வி முறையிலும் மாற்றங்கள் தேவை என்பதைத் தானும் பொதுமக்களும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மாற்றங்கள் நாட்டின் தனித்துவத்தையும் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“நாட்டின் கல்வி முறைமைக்கு முரணான சீர்திருத்தங்களை வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்த முயல்வதன் மூலம் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். முறையான ஆய்வின்றி முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் கவலை வெளியிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...