8 27
இந்தியாசெய்திகள்

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என்ன? ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

Share

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என்ன? ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார்.

அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். விஜயின் அரசியல் மாநாட்டை சேலத்தில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் அருகே உள்ள தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் மைதானங்களில் உள்ளூர் நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கொள்கைகள் குறித்து அறிவிக்க வேண்டும் என்பதால் அக்கட்சியின் தலைவர் விஜய் பலரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்தவகையில், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினாரிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தற்போது, விஜய் கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...