7 32
இலங்கைசெய்திகள்

பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

Share

பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald trump) சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் (Pennsylvania) மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி சார்பில் அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜூலை 13-ஆம் திகதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் டிரம்பின் காதில் பட்டது. ட்ரம்ப் திரும்பாமல் இருந்திருந்தால், துப்பாக்கி குண்டுகள் நேராக அவரது தலையில் சென்றிருக்கும். எனவே அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “நான் சமீபத்தில் சுடப்பட்ட இடத்தில் பேரணி நடத்தப் போகிறேன். எங்கள் அன்பிற்குரிய தீயணைப்பு வீரர் கோரியின் நினைவாக மாபெரும் பேரணியை நடத்த உள்ளேன்.

இதற்காக பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் செல்கிறேன். இந்த பேரணியின் முழு விவரம் விரைவில் தெரியவரும். விவரங்களுக்கு காத்திருங்கள்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...