images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெருகலில் மீண்டும் வெள்ள அபாயம்: மகாவலி கங்கையின் நீர்வரத்தால் வீதிகள், குடியிருப்புகள் மூழ்கின!

Share

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) மாலை முதல் மன்னம்பிட்டி ஊடாக மகாவலி கங்கையில் அதிகளவு நீர் வரத்தொடங்கியுள்ளது. இந்த மேலதிக நீர் வரத்து தற்போது வெருகல் பிரதேசத்தை வந்தடைந்துள்ளதால் இப்பகுதியில் வெள்ள நிலைமை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

வெருகல் பிரதேசத்தின் உள்ளக வீதிகள் மட்டுமன்றி, பிரதான வீதியும் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் வெருகல் பிரதேசவாசிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...