images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெருகலில் மீண்டும் வெள்ள அபாயம்: மகாவலி கங்கையின் நீர்வரத்தால் வீதிகள், குடியிருப்புகள் மூழ்கின!

Share

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) மாலை முதல் மன்னம்பிட்டி ஊடாக மகாவலி கங்கையில் அதிகளவு நீர் வரத்தொடங்கியுள்ளது. இந்த மேலதிக நீர் வரத்து தற்போது வெருகல் பிரதேசத்தை வந்தடைந்துள்ளதால் இப்பகுதியில் வெள்ள நிலைமை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

வெருகல் பிரதேசத்தின் உள்ளக வீதிகள் மட்டுமன்றி, பிரதான வீதியும் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் வெருகல் பிரதேசவாசிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...