wall 16dec25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் சுவர் கட்டுமானத்தின் போது சோகம்: மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு!

Share

பதுளை, ஹிந்தகொட பகுதியில் உள்ள வீடொன்றின் பக்கவாட்டுச் சுவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) மாலை 4:30 மணியளவில் பதுளை, களு டேங்க் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பக்கவாட்டுச் சுவர் (Retaining Wall) அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்டிருந்த நிலையில், திடீரென மேலிருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. இதன்போது அங்கு பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்கள் மண் குவியலுக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஹாலி எல, அந்துடவாவல பகுதியைச் சேர்ந்த சந்திர பால பண்டார (55) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தார். மற்றுமொரு தொழிலாளி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த தகவலறிந்ததும் இராணுவம், பொலிஸார், பதுளை மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். ‘சுவ செரிய’ (1990) அம்பியூலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பதுளை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவினர் சம்பவ இடத்திலேயே முதலுதவிகளை வழங்கினர்.

இருவரும் ஒப்பந்ததாரர் ஒருவரின் கீழ் பணியாற்றி வந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகப் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...