தனது நோபல் பதக்கத்தை ட்ரம்பிடம் ஒப்படைத்தார் மரியா கொரினா மச்சாடோ!

c817ae90 f2ab 11f0 b5f7 49f0357294ff

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துத் தனது நோபல் பதக்கத்தை வழங்கியுள்ளார்.

வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவியில் இருந்து அகற்ற ட்ரம்ப் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகளுக்காக, அவருக்கு நன்றிக்கடனாகத் தனது தங்க நோபல் பதக்கத்தை (Nobel Medallion) மச்சாடோ வழங்கினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், “மரியா ஒரு சிறந்த பெண். அவர் பட்ட துன்பங்கள் ஏராளம். எனக்கு அவர் தனது நோபல் பரிசை வழங்கியது பரஸ்பர மரியாதையின் அடையாளம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மச்சாடோ வழங்கிய பதக்கம் ஒரு தங்கச் சட்டகத்தில் (Gilded Frame) பொருத்தப்பட்டிருந்தது. அதில் “அமைதி மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்காகவும், அசாதாரணத் தலைமைத்துவத்திற்காகவும் வழங்கப்படும் தனிப்பட்ட நன்றியின் அடையாளம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மச்சாடோ தனது பதக்கத்தை வழங்கியிருந்தாலும், நோபல் கமிட்டி ஏற்கனவே இது குறித்துத் தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

நோபல் பரிசு என்பது ஒருவருக்கு அறிவிக்கப்பட்டால், அதனை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ முடியாது.

மச்சாடோ ட்ரம்பிடம் வழங்கியது கௌரவமான ஒரு உடல் ரீதியான பதக்கம் மட்டுமே. இதன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமான நோபல் வெற்றியாளராக (Nobel Laureate) மாற முடியாது என நோபல் குழு தெரிவித்துள்ளது.

ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்கப் படைகளால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மச்சாடோவுக்குத் தனது ஆதரவை வழங்கிய ட்ரம்ப், அதேசமயம் வெனிசுவேலாவின் தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version