MediaFile 1 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா மாணவர் மரணம்: பகிடிவதை குற்றச்சாட்டுக்கு மத்தியில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன!

Share

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 31) மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரின் உடற்கூற்று மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக இன்று (நவம்பர் 03) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா. சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் மதுபானம் அருந்தியதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே உயிரிழந்ததாக ஆரம்பத் தகவல்கள் கூறின.

எனினும், உயிரிழந்த மாணவரின் உறவினர்கள், அவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை (Ragging) காரணமாகவே உயிரிழந்ததாகப் பூவரசன்குளம் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மாணவரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும், அவர் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், உண்மையை உறுதிப்படுத்தவே உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...